ஈரானில் தயாரிக்கப்பட்ட, தன்னைத் தானே அழித்துக்கொள்ளக்கூடிய ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் ஒடெசா பிராந்தியங்களில் ரஷியா தீவிர தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
ரஷியாவால் கடந்த 2014-இல் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைனின் கிரீமியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான பாலத்தில் சனிக்கிழமை லாரி குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அதனை உக்ரைன்தான் நிகழ்த்தியதாக குற்றம் சாட்டும் ரஷியா, அதற்குப் பதிலடியாக அந்த நாட்டில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.