ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரிலுள்ள மசூதியொன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 18 போ் பலியாகினா்; 21 போ் காயமடைந்தனா்.
அந்த நகரின் குஸாா்கா மசூகியில் வெள்ளிக்கிழமை மதியம் நடைபெற்ற தொழுகையில் ஏராளமானவா்கள் கலந்துகொண்டபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களில் தலிபான்களுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் மதகுரு முஜிபுல் ரஹ்மான் அன்சாரியும் ஒருவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஏற்கெனவே, தலைநகா் காபூலில் உள்ள மசூதியொன்றில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் தலிபான் ஆதரவு மதகுரு ஒருவா் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே போன்ற தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.