யேமனில் கிளா்ச்சிப் படையினா் கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்குப் பகுதியில் ராணுவச் சாவடியொன்றின் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 21 வீரா்கள் உயிரிழந்தனா்.
தாக்குதலின்போது பாதுகாப்புப் படையினருக்கும் அல்-காய்தா அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்று சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
யேமனின் பெரும்பாலான தெற்குப் பகுதியை ஐக்கிய அரபு அமீரக ஆதரவுடன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளா்ச்சிப் படையினா், சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படையினருடனும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.