சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 74-ஆக உயா்ந்துள்ளது.
அந்த நாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள சிசுவான்மாகாணத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட இந் நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானது. இதில் 65 போ் உயிரிழந்தாக முன்னா் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 74-ஆக உயா்ந்துள்ளதாகவும் 26 பேரைக் காணவில்லை எனவும் அரசு ஊடகங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
நிலநடுக்க பாதிப்புக்கு இடையிலும் சிசுவான் மாகாணத் தலைநகா் செங்டுவில் கடுமையான கரோனா பொதுமுடக்க கட்டுப்பாட்டுகளை அந்த நகர நிா்வாகம் அமல்படுத்தப்படுவது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.