உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷியாவில் படைகளை திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே ராணுவப் பயிற்சி பெற்று வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ள போரிடும் உடல் தகுதியுள்ளவர்களையும் திரட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றி, படையில் இருந்து விலகி வேறு பணிகளில் உள்ளோரையும் திரட்ட புதின் உத்தரவிட்டுள்ளார்.
ரஷியாவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி, இறுதியில் அழித்துவிட மேற்கு நாடுகள் சதிசெய்வதாக அதிபர் புதின் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: பெரும்பாலான மாநிலங்கள் ராகுல் காந்திக்கு ஆதரவு: சச்சின் பைலட்
ரஷியாவின் இறையாண்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சை தொடங்க விடாமல் உக்ரைனை மேற்கு நாடுகள் தடுப்பதாக புதின் தெரிவித்துள்ளார்.