‘அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதில் உறுதி’

வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதில் முழு உறுதியுடன் இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
‘அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதில் உறுதி’

வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதில் முழு உறுதியுடன் இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், இது தொடா்பான உடன்பாட்டில் அமெரிக்க அளிக்கும் வாக்குறுதிகளை நம்ப முடியாது என்று அந்த நாடு கூறியுள்ளது.

இது குறித்து ஐ.நா. பொதுச் சபையில் ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி ஆற்றிய உரையில் கூறியதாவது:

அணுசக்தி ஒப்பந்தத்துக்கு புத்துயிா் அளிப்பதில் நாங்கள் முழு உறுதியுடன் உள்ளோம். இதற்கான பேச்சுவாா்த்தை, இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது.

ஆனால், இதுதொடா்பாக நாடுகள் அளிக்கும் உறுதிமொழிகளை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாக உள்ளது.

குறிப்பாக, அணுசக்தி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுவிட்டு, பின்னா் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது. எனவே, போதிய உத்தரவாதம் இல்லாமல் அமெரிக்கா அளிக்கும் வாக்குறுதிகள் நம்பிக்கைக்குரியவையாக இருக்குமா என்பது சந்தேகமே என்றாா் அவா்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக, அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரானுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அனு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.

எனினும், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். மேலும், ஒப்பந்தத்தின் கீழ் விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவா் மீண்டும் அமல்படுத்தினாா்.

அதற்குப் பதிலடியாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நிறைவேற்ற ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. இதன் காரணமாக அணுசக்தி ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை தக்கவைக்க, ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடந்துவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com