ஈரானில் ‘கலாசார’ காவலா்களால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி (22) என்ற குா்து இனப் பெண் இறந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டின் பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 35-ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை 700-க்கும் மேற்பட்ட போராட்டக்காரா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா்.