தனது திருமண வரவேற்பின்போது, யாரும் எதிர்பாராத வகையில், தனது தலைமுடியை பாதியாக வெட்டிக் கொண்ட மணமகளைப் பார்த்து திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மட்டுமல்ல, விடியோவைப் பார்க்கும் லட்சக்கணக்கானோர் நெகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிக்க | ஷ்ரத்தா கொலையை நிரூபித்த ஒரு துண்டு எலும்பும் தலைமுடியும்
மணமகள் தனது தலைமுடியை பாதியாக வெட்டிக் கொள்ளும் போது, மணமகன், மணமகளை அணைத்து முத்தமிடுகிறார். மணமகளின் உறவினர்கள் தொலைவில் நின்று கண் கலங்குகின்றனர். சிலர் கண்ணீர் துளிகளை துடைத்துக் கொள்கிறார்கள்.
இன்ஸ்டிகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கானோர் விரும்பிய அந்த விடியோவில், மணமகள், தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகிறார். அங்கு, தான் தனது தலைமுடியை வெட்டிக்கொள்ளப் போவதாக அறிவித்து, செல்கிறார்.
தனது தலைமுடியை வெட்டி புற்றுநோயாளிகளுக்கு தானமளிக்க விரும்புவதாகக் கூறும் மணமகள், தனது நீண்ட அலங்காரம் செய்த கூந்தலை அவிழ்த்து அதனை வெட்டி எடுக்கிறார். இதனைப் பார்க்கும் பலரும் கண்ணீர் விடுகிறார்கள். சிலர் கைத்தட்டி பாராட்டுகிறார்கள்.