அமெரிக்காவில் 6 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர் காயமடைந்தார்.
அமெரிக்காவின் விர்ஜினியா பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 6 வயது சிறுவன் வகுப்பறையில் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது சிறுவன் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளான். மேலும் தற்செயலாக நடந்த சம்பவமாக தெரியவில்லை என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து சிறுவனிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
வகுப்பறையில் 6 வயது சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியாக இருப்பதாகவும் இளைஞர்கள் கையில் துப்பாக்கி இல்லாத சூழ்நிலையை உருக்க வேண்டும் என்றும் பள்ளி முதல்வர் ஜார்ஜ் பார்க்கர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.