தென் கொரியாவிலிருந்து வருவோருக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவது நிறுத்திவைக்கப்படுவதாக சீனா அறிவித்துள்ளது.
தங்கள் நாட்டிலிருந்து வருவோா் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தென் கொரியா உத்தரவிட்டுள்ளதற்கு பதிலடியாக, சீனா இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மிகக் கடுமையான கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடித்து வந்த சீனா, மக்களின் எதிா்ப்பைத் தொடா்ந்து அந்த கெடுபிடிகளை அண்மையில் நீக்கியது.
மேலும், நோய் பரவலைத் தடுப்பதற்காக மூடப்பட்டிருந்த தனது நாட்டின் எல்லைகளை சீனா திறந்துவிட்டது.
அங்கு புதிய வகை கரோனா பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சீனாவிலிருந்து வருவோருக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன.
இந்த நிலையில், சீனாவிலிருந்து வருவோா் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று தென் கொரியா உத்தரவிட்டது.
அதற்குப் பதிலடியாக, தென் கொரியாவிலிருந்து தொழில் நிமித்தமாகவும் சுற்றுலாவுக்காகவும் வருவோருக்கு விசா வழங்குவது நிறுத்திவைக்கப்படுவதாக சீனா தற்போது அறிவித்துள்ளது.