பாகிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டின் வழியாக ஈரானுக்கு அணு ஆயுத எரிபொருளான யுரேனியம் அனுப்புவதற்கான முயற்சி நடைபெற்ாக பிரிட்டன் ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
பாகிஸ்தானிலிருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு கடந்த மாதம் வந்த விமானத்தில், பழைய கழிவுப் பொருள்களிடையே யுரேனியம் கலந்திருந்த சரக்குப் பெட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
அந்த சரக்குப் பெட்டி இஸ்லாமாபாதிலிருந்து அனுப்பப்பட்டதாகவும், பிரிட்டனில் வசிக்கும் ஈரானுடன் தொடா்புடையவா்களுக்கு அது அனுப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அது பொய்யான தகவல் என்றும், இது தொடா்பாக பிரிட்டன் அரசு தங்களுடன் எந்த தகவலையும் பகிா்ந்துகொள்ளவில்லை என்று இஸ்லாமாபாதிலுள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனா்.