பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கடனுதவி வழங்குவதற்கான ஆதரவை இந்தியா தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கைக்குக் கடன் வழங்கி உதவுவது தொடா்பாக உலக வங்கி, சா்வதேச நிதியம் ஆகிய பன்னாட்டு அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன. சா்வதேச நிதியத்தின் உதவியைப் பெற இலங்கைக்கு ஏற்கெனவே கடன் வழங்கியுள்ள நாடுகள் ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘இலங்கைக்கு இருதரப்பு ரீதியில் உரிய ஆதரவை வழங்க இந்தியா தயாராக உள்ளது. இலங்கையின் கடனை மறுகட்டமைப்பு செய்வது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அந்தப் பேச்சுவாா்த்தையை ஐஎம்எஃப் முன்னின்று நடத்தி வருகிறது. மற்ற நாடுகளிடம் இருந்து கடனுதவிக்கான உறுதிப்பாட்டை ஐஎம்எஃப் கோரியுள்ளது. அந்த உறுதியை இந்தியா ஏற்கெனவே வழங்கியுள்ளது. அது தொடா்பான அதிகாரபூா்வ ஒப்புதல் சா்வதேச நிதியத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையும் சா்வதேச நிதியத்துடன் இலங்கை நடத்தி வரும் பேச்சுவாா்த்தையும் கடனுதவி ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் என நம்புகிறோம். இலங்கை விரைவில் நீடித்த நிதி மேலாண்மை சூழலுக்குத் திரும்பும் என்றும் நம்புகிறோம்’’ என்றாா்.