
தென் அமெரிக்க நாடான சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிலியின் கோக்யும்போ நகருக்கு 41 கி.மீ. வட-வடமேற்கே 41 கி.மீ. ஆழத்தில் உள்ளூா் நேரப்படி புதன்கிழமை இரவு 8.48 மணிக்கு (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 6.18 மணி) நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.2 அலகுகளாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் சிலி அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.