முல்லைப் பெரியாறு அணை தென் மாவட்டங்களின் உயிர்நாடி! அந்த அணையின் பயன் தமிழ்நாட்டுக்கு உரியது எனினும், அந்த அணை இருப்பது தமிழ்நாட்டை ஒட்டிய கேரள எல்லையில்!
குமரி மாவட்டம் திருவாங்கூர் அரசின் கீழ் இருந்தது என்றாலும், முற்ற முழுக்கத் தமிழ் பேசுகின்ற மக்களைக் கேரளத்தோடு வைத்திருந்து வகை செய்ய முடியாது என்பதால் அதை மலையாளிகள் விட்டுவிட்டார்கள்!
இதே போல் மலைப் பகுதியான, மூணாறு மாவட்டம் என்று கேரளத்தில் இப்போது அறியப்படுகிற பகுதியில் இணைக்கப்பட்டிருக்கிற தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் முற்ற முழுக்கத் தமிழர்கள் வாழும் பகுதி! இன்றைக்கும் அவை தமிழ்ப் பகுதிகள்தாம்!