இணையதளச் செய்திப் பிரிவு
ஃபிடே மகளிா் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்தியாவின் 88-ஆவது ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகி பெருமை தேடித் தந்துள்ளார் திவ்யா.
‘கிராண்ட் மாஸ்டர்’ ஆக மகுடம் சூட்டியிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த 4-ஆவது வீராங்கனை என்ற பெருமை திவ்யாவுக்கு கிட்டியுள்ளது.
2025-இல் இந்தியாவிலிருந்து எல். ஆர். ஸ்ரீஹரி, அ. ரா. ஹரிகிருஷ்ணன் மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகிய மூவர் ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகி சாதனை படைத்துள்ளனர்.
அதிக ‘கிராண்ட் மாஸ்டர்’ கொண்ட நாடுகள் பட்டியலில் ரஷியா, அமெரிக்கா, ஜெர்மனி, உக்ரைனுக்கு அடுத்த இடத்தில் 5-ஆவதாக இந்தியாவும் முன்னேறியுள்ளது.
இளம் வயதில் ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் வென்ற சாதனையாளர்கள் பட்டியலில் இனி திவ்யாவுக்கும் சிறப்பிடம் உண்டு...
தாயாருடன் திவ்யா தேஷ்முக்!
வாழ்த்துகள் திவ்யா தேஷ்முக்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.