உதயை மு. வீரையன்
ஆசிரியர் பணிபெற வேண்டுமானால் பயிற்சி பெற வேண்டும் என்று அதற்கு அரசு விதிகளும் வகுக்கப்பட்டன.
தமிழகத்தில் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.
கடந்த 2025-ஆம் ஆண்டுக்கான 'டெட்' தேர்வு கடந்த நவம்பர் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெற்றது. 4.24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.
இப்போது பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ’டெட்' தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற, பொதுப் பிரிவினர் 60% (90 மதிப்பெண்கள்) எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55% (82 மதிப்பெண்கள்) எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலும் அண்மையில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 'டெட்' தேர்ச்சி மதிப்பெண் 5% வரைக் குறைக்கப்பட்டது.
தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் நலன் கருதி கற்பித்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்கும் ஆசிரியர்களைப் போற்றாத சமுதாயம் எப்படி முன்னேறும்?
இதை அரசும், கல்வித் துறையும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.