ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் பல கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுகிறது. தற்போது நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பல கட்சி ஆட்சி முறையில் நன்மைகளும் உண்டு.
மக்கள் தங்களுக்குப் பிடித்தவர்களைத் தேர்வு செய்யலாம்; சமூகத்தின் பல தரப்பினரின் கருத்துகள் அரசில் பிரதிபலிக்கலாம்; ஒரே கட்சியின் ஆதிக்கம் குறையும்; அதிகாரம் பகிரப்படும்.
சிறிய கட்சிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கூட்டணி அரசுக்கு வாய்ப்பு ஏற்பட்டு, அதனால் பல கட்சிகளின் ஆலோசனையுடன் சமநிலை முடிவுகள் எடுக்கப்படும்.