கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கஜா  புயல் எச்சரிக்கை: காரைக்கால், மயிலாடுதுறை தடத்தில் ரத்தாகும் ரயில்கள்

கஜா புயல் எச்சரிக்கை காரணமாக, காரைக்கால், மயிலாடுதுறை தடத்திலான விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள்

News image
Updated On :15 நவம்பர் 2018, 1:58 am

DIN

கஜா புயல் எச்சரிக்கை காரணமாக, காரைக்கால், மயிலாடுதுறை தடத்திலான விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களின் போக்குவரத்து நவ. 15, 16 ஆகிய தேதிகளில் முழுமையாகவும், பகுதியளவிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கஜா புயல் வியாழக்கிழமை பிற்பகல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, பலத்த காற்று வீசக் கூடும் எனவும், கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவ. 15-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில் சேவைகள் :  காரைக்கால் - சென்னை விரைவு ரயில், வேளாங்கண்ணி - சென்னை (இணைப்பு) விரைவு ரயில், மன்னார்குடி - சென்னை விரைவு ரயில், வேளாங்கண்ணி - காரைக்கால் பயணிகள் ரயில், காரைக்கால் - தஞ்சாவூர் பயணிகள் ரயில், விழுப்புரம் - மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில்கள் வியாழக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 
மேலும், எர்ணாகுளம்- காரைக்கால் விரைவு ரயில் நாகையுடனும்,  திருச்சிராப்பள்ளி - காரைக்கால் பயணிகள் ரயில் திருவாரூருடனும், கே.எஸ்.ஆர். பெங்களூரு- காரைக்கால் பயணிகள் ரயில் மயிலாடுதுறையுடனும் நிறுத்தப்படுகின்றன. 
நவ. 16-ஆம் தேதி பகுதியளவில் நிறுத்தப்படும் ரயில் சேவைகள்:  காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் திருவாரூருடன் நிறுத்தப்படுகிறது.  காரைக்கால் - கே.எஸ்.ஆர். பெங்களூரு பயணிகள் ரயில் மயிலாடுதுறையிலிருந்து இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.