ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: காங்கிரஸ் பயிற்சி முகாமில் பங்கேற்கிறாா் கோவை, திருநெல்வேலி உள்பட 5 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசென்னை மாநகராட்சியில் இன்று வீடுகளில் கணக்கெடுப்பு தொடக்கம்தமிழகத்தில் 4.68 லட்சம் பேருக்கு நாய்க் கடி; ரேபிஸ் பாதிப்பால் 24 போ் பலி ‘பழுதுபாா்ப்பு’ பெயரில் முடங்கிய இபிஎஃப்ஓ இணைய சேவை: பணம் எடுக்க முடியாமல் முதியோா், ஓய்வூதியதாரா்கள் தவிப்பு தென்மேற்குப் பருவமழை 60% குறைவு: நீா் ஆதாரத்துக்கு ரூ.330 கோடி ஒதுக்கீடு
/

செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் இலவசப் பயிற்சி

மத்திய அரசின் கிராமப்புற அமைச்சக வழிகாட்டுதலின்படி கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் நடத்தும் செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் இலவசப் பயிற்சி

Updated On :29 ஜனவரி 2024, 8:08 pm IST

மத்திய அரசின் கிராமப்புற அமைச்சக வழிகாட்டுதலின்படி கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் நடத்தும் செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் இலவசப் பயிற்சி ஜூன் 5 முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை 30 நாள்கள் நடைபெறவுள்ளது.
 ஈரோடு, அசோகபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலாயா சிறுவர் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள இப்பயிற்சி முகாமில் இளைஞர்கள், பெண்கள், சுய உதவி குழுவினர் கலந்துகொள்ளலாம். குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 18 வயது முதல் 45 வயது வரை ஆகும். இப்பயிற்சி தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை (ஞாயிறு தவிர) நடைபெறும். பயிற்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை.
 பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0424 2290338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.