சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ரமலான் நோன்புக்கு கூடுதல் அரிசி: தமிழக அரசுக்கு பாராட்டு

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசியை கூடுதலாக வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நாகூர் தர்கா பரம்பரை ஆதினம் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் பாராட்டு தெரிவித்தார்.

Updated On :25 மே 2017, 6:26 am IST

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசியை கூடுதலாக வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நாகூர் தர்கா பரம்பரை ஆதினம் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் பாராட்டு தெரிவித்தார்.
ஆண்டுதோறும் தமிழக அரசு இஸ்லாமிய மக்களுக்காக, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசியை பள்ளி வாசல்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு 4,600 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டது. நிகழாண்டில் கூடுதலாக 300 மெட்ரிக் டன்
பச்சரிசி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதற்கு நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.  மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சி நிர்வாகத்தினர், நோன்பு பிறைக்கு முன்பாகவே தமிழக அரசின் விலையில்லா அரிசியை உரிய பள்ளிவாசல், தர்கா, தைக்காலுக்கு சேர்க்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.