திருச்சி, பிப். 11: திருச்சி வரகனேரி த. செவந்திலிங்கம் முத்தரையர் உயர்நிலைப் பள்ளியின் 50-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி நிர்வாகி த. செவந்திலிங்கம் தலைமை வகித்தார். திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப. குமார் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். வழக்குரைஞர் பி. சரவணன், மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் மாணவர் ஜி. லோகநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.