தெளிப்பான் முறையில் சின்ன வெங்காயப் பயிருக்கு நீர்ப்பாய்ச்சுவதன் மூலம் காலநேரம்,மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வளங்களைச் சேமித்து வருகிறார் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர் ந. திருநாவுக்கரசு.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட இரூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு முதுநிலை பட்டப் படிப்பு (எம்.சி.ஏ) முடித்து,அவருக்குச் சொந்தமான நிலத்தில் சின்ன வெங்காயப் பயிருக்கு நீர்த்தெளிப்பான் முறையில் நீர்ப்பாய்ச்சி வரும் அவர் மேலும் கூறியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதிய மழை இல்லாததால் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள பெரும்பாலான விவசாய நிலங்களில் பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன. இதைத் தவிர்க்கும் வகையில், எனது ஒரு ஏக்கர் பரப்பளவில் முன்னோட்டமாக ரூ. 40 ஆயிரம் மதிப்பில் நீர்த்தெளிப்பான் கருவிகள் மூலம் வெங்காயப் பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்சி வருகிறேன்.
சொட்டுநீர் அல்லது வரப்புகள் மூலம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு நீர் பாய்ச்ச வேண்டுமெனில் சுமார் 6 மணி நேரமாகும். ஆனால், நீர்த்தெளிப்பான் முறையில் 3 மணிநேரமே போதுமானது. ஒரு ஏக்கருக்கு 100 நீர்தெளிப்பான் கருவிகள் பொருத்தியுள்ளதால், அனைத்து இடங்களிலும் நீர்ப்பாய்ச்ச முடிகிறது.
இதன் மூலம் காலநேரம்,மின்சாரம் ஆகியவை சேமிக்கப்படுவதோடு,தண்ணீர் வீணாவது தடுக்கப்படுகிறது. சொட்டுநீர்ப் பாசன முறையைப் போல், நீர்த்தெளிப்பான் முறைக்கும் வேளாண் துறையினர் மான்யம் வழங்கினால் விவசாயிகள் பெரிதும் பயனடைவர் என்றார் அவர்.
சின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் 23% சாகுபடி செய்து மாநிலத்திலேயே முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கப்பல் துறை கட்டணம் செலுத்துவதில் முறைகேடு: சுங்கத் துறை அதிகாரி, தனியாா் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு ரத்து

காற்றாலை, சூரிய ஒளி மின் உற்பத்தியாளா்கள் நிகழ்நேர தரவுகளைப் பகிா்வது கட்டாயம்: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா்
அரக்கோணம் ரயில் நிலையம் ரூ.97 கோடியில் சீரமைப்பு: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சா்கள்: சென்னையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரம்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



