ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 37% அதிகரிப்பு

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை இரண்டாம் காலாண்டில் 37 சதவீதம் அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2017, 7:10 pm

DIN

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை இரண்டாம் காலாண்டில் 37 சதவீதம் அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக தங்க கவுன்சிலின் இந்திய பிரிவு நிர்வாக இயக்குநர் பி.ஆர். சோமசுந்தரம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
நடப்பு 2017-ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 167.4 டன்னாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் காணப்பட்ட தேவையான 122.1 டன்னுடன் ஒப்பிடுகையில் இது 37 சதவீதம் அதிகம். மதிப்பின் அடிப்படையில் இதற்கான தேவை ரூ.33,090 கோடியிலிருந்து 32 சதவீதம் அதிகரித்து ரூ.43,600 கோடியாக இருந்தது.
இருப்பினும், ஐந்தாண்டு கால சராசரியுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் காலாண்டில் தங்கத்துக்கான தேவை குறைந்தே காணப்பட்டது. ஜிஎஸ்டி எதிரொலியாக இரண்டாம் காலாண்டு இறுதியில் தங்க விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. ஒரு சதவீத உற்பத்தி வரியை எதிர்த்து நகை வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த ஆண்டின் இதே கால அளவில் ஆபரண விற்பனை பாதிக்கப்பட்டது.
நடப்பு ஆண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 650-750 டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் காலாண்டில் ஆபரணங்களுக்கான தேவை 89.8 டன்னிலிருந்து 41 சதவீதம் அதிகரித்து 126.7 டன்னாக இருந்தது. மதிப்பின் அடிப்படையில் இதற்கான தேவை ரூ.24,350 கோடியிலிருந்து 36 சதவீதம் அதிகரித்து ரூ.33,000 கோடியாக காணப்பட்டது.
முதலீட்டு நோக்கிலான தங்கத்துக்கான தேவை 26 சதவீதம் உயர்ந்து 40.7 டன்னாக இருந்தது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.8,740 கோடியிலிருந்து 21 சதவீதம் அதிகரித்து ரூ.10,610 கோடியானது.
உலக அளவில் தங்கத்துக்கான தேவை இரண்டாம் காலாண்டில் 10 சதவீதம் சரிந்து 953 டன்னாக இருந்தது. தங்கத்தின் அடிப்படையிலான கடன் பத்திரங்களான ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு குறைந்து போனதையடுத்து இந்த நிலை ஏற்பட்டது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.