இந்தியத் தூதரை பாகிஸ்தான் அரசு அவமதித்ததாகப் புகார் எழுந்ததை அடுத்து, இதுதொடர்பாக கடும் ஆட்சேபம் தெரிவிக்க இந்தியாவில் உள்ள அந்நாட்டுத் தூதர் அப்துல் பாஸித்துக்கு மத்திய அரசு அழைப்பாணை அனுப்பியது.
கராச்சி வர்த்தக அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும், உரையாற்றுவதற்கும் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் கௌதம் பம்பாவாலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் உரையாற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே எந்தக் காரணமும் தெரிவிக்காமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதற்கு கண்டனமும், வருத்தமும் தெரிவிக்கும் வகையில், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் பாஸித்துக்கு மத்திய அரசு புதன்கிழமை அழைப்பாணை அனுப்பியது.
இந்த அழைப்பாணையை வெளியுறவுத் துறை (மேற்கு) செயலர் சுஜாதா மேத்தா அனுப்பி வைத்ததாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் தங்கள் பணிகளைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்று நம்புவதாக அப்துல் பாஸித்திடம் தெரிவிக்கப்பட்டது' என்றார்.
முன்னதாக, கராச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற கௌதம் பம்பாவாலே, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முத்தரப்பு ஒருநாள் தொடரை வென்ற இந்தியா ஏ அணி!

நீட் மறுதேர்வு எளிமையா? கடினமா?

நீட் மறுத்தேர்வு எப்படி இருந்தது? - தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து!

மக்களை நோக்கி விஜய்... தலைவாவிலிருந்து ஜன நாயகன் வரை!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



