பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காவிரி விவகாரத்தால் வன்முறை: நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

News image
Updated On :14 செப்டம்பர் 2016, 6:57 am

PTI


புது தில்லி: தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, செப்டம்பர் 7ம் தேதி முதல் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. ஏராளமான பேருந்துகள், லாரிகள் வான்முறையாளர்களின் வெறியாட்டத்தால் தீக்கிரையாகின.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு நிலை மோசடைந்தது குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை நாளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.