மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மே 1 முதல் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்: முதல் கட்டமாக 5 நகரங்களில் சோதனை

சோதனை அடிப்படையில் இந்தியாவின் 5 நகரங்களில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயிக்க பெட்ரோலிய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

News image
Updated On :12 ஏப்ரல் 2017, 9:02 am


புது தில்லி: சோதனை அடிப்படையில் இந்தியாவின் 5 நகரங்களில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயிக்க பெட்ரோலிய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

சோதனையின் அடிப்படையில் இந்த நடைமுறை வெற்றி பெற்றால், படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், மே 1ம் தேதி முதல் நாட்டின் 5 நகரங்களில் சோதனை அடிப்படையில், தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்ய பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

வல்லுநர்களின் பரிந்துரையை ஏற்று, சர்வதேச விலைக்கேற்ற வகையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பது என பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து, அதனை சோதனை செய்ய முடிவு செய்துள்ளது.

அதன்படி, புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர், ஜம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய நகரங்களில் மே 1ம் தேதி முதல் இந்த முறை நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற பெட்ரோலிய நிறுவனங்களின் விவகாரங்களில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.