சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

லஷ்கர்-இ-தொய்பா தளபதி இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொலை

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதிகளில் ஒருவன் இந்திய ராணுவத்தால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டான்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2017, 7:35 pm IST

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் அமைந்துள்ள புல்வாமா என்ற இடத்தில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய ராணுவத்தில் இருந்து தக்க பதிலடி அளிக்கப்பட்டது. 

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதிகளில் ஆயூப் லேல்ஹாரி என்பவன் இந்திய பாதுகாப்புப் படையால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டான். இதனை இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், 3 பயங்கரவாதிகள் வரை இதில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஹர்கத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா என்ற இடத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சோஃபியன் பகுதியில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஹிசாபுல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி யாசின் உட்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஹிஸ்புல் முஜாஹிதீன் காஷ்மீர் பிரிவு தளபதி மெஹமுது கஸ்னவி அதே இடத்தில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இதுபோல சமீபகாலமாக ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் சர்வதேச பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்திய ராணுவம் அவர்களுக்கு தக்க பதிலடி அளித்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.