கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பிகார்: மீட்புப் படகில் பிறந்த ஆண் குழந்தை

பிகாரில் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த படகிலேயே கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

Published On :

பிகாரில் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த படகிலேயே கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பிகாரில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால் அங்கு பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழலில் தவித்து வருகின்றனர்.
இதுபோன்று வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில், மதுபானி மாவட்டம் பென்னிபட்டி கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் புதன்கிழமை ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணியை மீட்ட பேரிடர் மீட்புப் படையினர், அவரை தங்களின் படகில் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படவே, படகில் இருந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அப்போது, அந்தப் பெண்ணுக்கு படகிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து, தாய் - சேய் இருவரையும் மீட்புப் படையினர், அருகிலிருந்த ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.