பணப்பரிமாற்றத்துக்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியது ஸ்டேட் பாங்க்

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐஎம்பிஎஸ் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
பணப்பரிமாற்றத்துக்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியது ஸ்டேட் பாங்க்


புது தில்லி: இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐஎம்பிஎஸ் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

உடனடி பணப்பரிமாற்ற சேவை எனப்படும் ஐஎம்பிஎஸ் (IMPS) முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான சேவைக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து டிவிட்டரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதத் துவக்கத்தில், வங்கிப் பணியில் தனது 62வது ஆண்டினை நிறைவு செய்திருக்கும் எஸ்பிஐ, ரூ.1000 வரை ஐஎம்பிஎஸ் முறையில் பணப்பரிமாற்றம் செய்ய எந்த கட்டணமும் விதிக்கப்படவில்லை.

அதே சமயம், ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பணப்பரிமாற்றத்துக்கு ரூ.5 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டி வரிக்கு அப்பாற்பட்டது. அதே போல, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான பணப்பரிமாற்றத்துக்கு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎம்பிஎஸ் முறையில் 24X7 மணி நேரமும் பணப்பரிமாற்றம் செய்யலாம். அதே சமயம், பணப்பரிமாற்றத்துக்கான கோரிக்கை செல்போன் அல்லது இணையதளம் மூலமாக வைக்கப்பட்டதுமே, உடனடியாக பணப்பரிமாற்றம் செய்யப்படும் என்பது இதன் சிறப்பம்சங்களாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com