சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: சுஷ்மா சுவராஜ்

கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 ஜூன் 2017, 9:56 am IST

கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

கத்தார் உடனான உறவுகளை அரபு நாடுகள் துண்டித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைருவமான மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு அண்மையில் எழுதியுள்ள கடிதத்தில், கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், கத்தாரில் தமிழர்கள் உட்பட ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.