ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிவசேனை வேட்பாளர் மும்பை மேயராக தேர்வு

சிவசேனை வேட்பாளர் விஸ்வநாத் மகாதேஷ்வர் பிருஹன் மும்பை மாநகராட்சியின் புதிய மேயராக வார்டு உறுப்பினர்களால் புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

News image
மும்பை மாநகராட்சியின் புதிய மேயராக தேர்வு செய்யப்பட்ட விஸ்வநாத் மகாதேஷ்வருக்கு மலர்க் கொத்து அளித்து வாழ்த்திய சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே. நாள்: புதன்கிழமை
Updated On :8 மார்ச் 2017, 9:55 pm

DIN

சிவசேனை வேட்பாளர் விஸ்வநாத் மகாதேஷ்வர் பிருஹன் மும்பை மாநகராட்சியின் புதிய மேயராக வார்டு உறுப்பினர்களால் புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
பிருஹன் மும்பை, புணே, தாணே உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கான தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சிகளில் பாஜக வெற்றி பெற்றது. எனினும், மும்பையில் சிவசேனை அதிக இடங்களை கைப்பற்றியது. இருப்பினும், அக்கட்சியின் வேட்பாளர் மேயராக வேண்டுமானால் மற்றொரு கட்சியின் ஆதரவு தேவைப்பட்டது.
ஏற்கெனவே மத்திய அரசிலும், மகாராஷ்டிர அரசிலும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனை, மாநகராட்சித் தேர்தலில் மட்டும் கூட்டணி அமைத்துக் கொள்ளாமல் தனித்துப் போட்டியிட்டது. எஞ்சியுள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கொள்கை ரீதியாக முரண்பாடு கொண்டிருப்பதால், மேயர் பதவிக்கு அக்கட்சிகள் சிவசேனைக்கு ஆதரவளிக்க வாய்ப்பில்லாத சூழல் நிலவி வந்தது.
இந்த நிலையில், மும்பை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு பாஜக போட்டியிடாது என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, சிவசேனை வேட்பாளருக்கு பாஜக ஆதரவு கிடைப்பது உறுதியானது.
புதிய மேயரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு பிருஹன்
மும்பை மாநகர மன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மகாதேஷ்வரை எதிர்த்து மேயர் பதவிக்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விட்டல் லோகரே வெறும் 31 வாக்குகளை மட்டும் பெற்று தோல்வி அடைந்தார்.
பாஜக உறுப்பினர்களின் ஆதரவுடன் மகாதேஷ்வர் 171 வாக்குகளைப் பெற்று புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
மகாதேஷ்வர் மும்பை மாநகராட்சியின் 76-ஆவது மேயர் ஆவார். 56 வயதாகும் இவர், மும்பை மாநகராட்சியின் கல்விக் குழுவின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார்.
சிவசேனை வேட்பாளார் ஹேமங்கி ஒர்லிக்கர் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக, புதிய மேயரை தேர்வு செய்வதற்காக அவையில் உறுப்பினர்கள் ஒன்று கூடியபோது பாஜக உறுப்பினர்கள் "மோடி-மோடி' என்ற கோஷம் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.