லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

’ஊழலில் ஆந்திரம் முதல் மாநிலம்?': சந்திரபாபு விளக்கம்

ஊழலில் முதல் மாநிலம் ஆந்திரப் பிரதேசம் என்று தவறுதலாக கூறிவிட்டதாக அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கமளித்தார்.

News image
Updated On :21 மார்ச் 2017, 7:19 pm

ஊழலில் முதல் மாநிலம் ஆந்திரப் பிரதேசம் என்று தவறுதலாக கூறிவிட்டதாக அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கமளித்தார்.
அந்த மாநில சட்டப் பேரவையில் இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை அளித்த விளக்கம்: வளர்ச்சி, ஊழல் ஒழிப்பில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ஆந்திரம் என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக வளர்ச்சி, ஊழல் ஆகியவற்றில் முதல் மாநிலம் என்று திங்கள்கிழமை பேரவையில் கூறிவிட்டேன்.
உண்மையில், ஊழலை ஒழித்து வளர்ச்சிப் பாதைக்கு சென்றுகொண்டிருக்கும் மாநிலங்களில் ஆந்திரம்தான் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது.
நான் திங்கள்கிழமை தெரிவித்த கருத்தை அவைக் குறிப்பில் இருந்து அவைத் தலைவர் நீக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.