விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

கோவாவில் வெங்காயம் போல் விற்பனையாகும் "சிம்' கார்டுகள்

கோவா மாநிலத்தில் சமூக விரோதிகள் வெங்காயம் வாங்குவதைப் போல செல்லிடப் பேசிகளுக்கான "சிம்' அட்டைகளை மிக எளிதில் வாங்கி வருவதாக அந்த மாநில காவல்துறை தலைவர் முக்தேஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.

Published On :

கோவா மாநிலத்தில் சமூக விரோதிகள் வெங்காயம் வாங்குவதைப் போல செல்லிடப் பேசிகளுக்கான "சிம்' அட்டைகளை மிக எளிதில் வாங்கி வருவதாக அந்த மாநில காவல்துறை தலைவர் முக்தேஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
போலி ஆவணங்களை சமர்ப்பித்து சமூக விரோதிகள் மிக எளிதில் "சிம்' அட்டைகளைப் பெற்று வருகின்றனர்.
வேறு நபர்களின் புகைப்படம், பெயர், போலிக் கையெழுத்து ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களால் "சிம்' அட்டைகளைப் பெற முடிகிறது.
தகவல் தொடர்பு நிறுவனங்கள் தங்களிடம் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை நேரில் சென்று சரிபார்ப்பது கிடையாது. இதனால், கோவாவில் "சிம்' அட்டைகள் வெங்காயம், உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகளைப் போல விற்பனையாகின்றன. வாடிக்கையாளர் அடையாள விதிமுறையை (கேஒய்சி) நிறுவனங்கள் அலட்சியம் செய்வது, சமூக விரோதிகளுக்கு
சாதகமாக அமைந்துள்ளது.
இதன் காரணமாக, பல வழக்குகளில் "சிம்' அட்டைகளை உண்மையிலேயே பயன்படுத்தியவர் யார் என்பதைக் கண்டறிவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.