அங்காரா: துருக்கியில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 மாணவிகள் உள்பட 12 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தென் துருக்கி மாகாணத்தின் அதானாவில் இருக்கும் பள்ளி விடுதி ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் விடுதியில் இருந்த மாணவிகளில் 11 பேர் மற்றும் விடுதி காப்பாளராக பணிபுரிந்த பெண் உட்பட 12 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த விடுதியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏழை மாணவிகள் 34 பேர் தங்கியிருந்துள்ளனர். தீ விபத்தில் குறைந்தது 22 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் மின் கோளாறினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுதியில் இருந்து இதுவரை 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதியின் தீயை தொலைக்காட்சி ஒளிப்பரப்பை காட்சியை வைத்து அருகில் இருந்து பல மாடி கட்டிடத்தின் வழியாக தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்து நடந்த இடத்தை துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோயல், துணை பிரதமர் வெய்சி காய்னக் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பியார் பிரேமா கல்யாணம் திரைப்படத்தின் முதல் பாடல்!
காமன்வெல்த்: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகை அறிவிப்பு

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 1 - நேரலை!

சென்னை, 21 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



