எல்லையில் துப்பாக்கிச்சண்டை: காஷ்மீரில் பதற்றம்

ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள அரசு அலுவலகத்தை இன்று தீயிட்டு எரித்த பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்
எல்லையில் துப்பாக்கிச்சண்டை: காஷ்மீரில் பதற்றம்
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள அரசு அலுவலகத்தை இன்று தீயிட்டு எரித்த பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

காஷ்மீரின் பாம்போர் என்ற இடத்தில் மாநில அரசுக்கு சொந்தமான தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிலகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்டிட வளாகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பு கருதி உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தீப்பற்றி எரியும் அந்த கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாகவும், இதில் ராணுவ வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கட்டிட வளாகத்தில் 2 முதல் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இதே கட்டிடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாதுகாப்பு படைகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையில் தொடர்ந்து 48 மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com