சிரியாவில் உடனடியாக போர்நிறுத்தத்தை அமல்படுத்தவேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிரியாவில் போர் ஒப்பந்தத்தை மீறி இரு தரப்பு படைகளும் தாக்குதல் நடத்த தொடங்கின.நேற்று நடந்த குண்டு வீச்சில் 25 பேர் உயிரிழந்தனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர். ஏராளமான பொதுமக்கள் பலியாவதால் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.
இந்நிலையில் சிரியாவில் உடனடியாக போர்நிறுத்தத்தை அமல்படுத்தவேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாடிகனின் பீட்டர் சதுக்கத்தில் நடந்த வாராந்திர பிரார்த்தனைக் கூட்டத்தில் போப் பிரான்சிஸ் பேசுகையில், சிரியாவில் மனிதாபிமானமற்ற முறையில் நடக்கும் சண்டையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆறுதலை தெரிவிக்க விரும்புகிறேன்.
அத்துடன் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். விமான குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களை வெளியேற்றும் வரையிலாவது போர்நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பறவைக் காதலன்

பொதுத்துறை நிறுவனத்தில் கணக்காளர், உதவியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இராமன் போந்த உலா!

எறும்பென்று எளிதாக நினைத்தனையோ!
வீடியோக்கள்

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


