

பயணிகளின் ரயில்களில் டிக்கெட் விலையை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: -
ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ஆகிய ரயில்களில் டிக்கெட் விலைகளில் பத்து சதவிகிதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பத்து சதவிகித டிக்கெட்டுகளுக்கு பிறகு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு கூடுதலாக பத்து சதவிகித கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம் ரயில் கட்டணங்கள் விமான கட்டணங்களுக்கு இணையாக வசூலிக்கப்படும். தட்கல் மூலம் முன் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு தற்போதுள்ள முறையே கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு நாளை மறுதினம் அமலாகவுள்ள நிலையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்களின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.