சென்னை: அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் ஊதியக் குழு முரண்பாடுகளை களையவும் வலியுறுத்தி, வரும் செப்டம்பர் 7 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 22-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.