சூளைமேடு பகுதியில் திருவள்ளுவர்புரம் வட அகரம் சாலை சந்திப்பில் விருகம்பாக்கம் கால்வாய்ப்பாலத்தில் தாணே புயலின்போது அடித்து வரப்பட்டு தேங்கிய கழிவுகளை அகற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை. இப்போது வர்தா புயலின் கழிவுகளும் சேர்ந்து கொண்டுள்ளன. பாலத்தின் வழியாகக் கழிவு நீர் செல்வது தடுக்கப்பட்டு கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமுள்ளது. அதிகாரிகள் இக்கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.எம்.முருகேசன், சூளைமேடு.