பிராட்வே பிரகாசம் சாலையில் இரவு 10 மணிக்கு மேல் வரிசையாக இருபுறமும் கனரக வாகனங்கள், மாட்டு வண்டிகள், லாரிகளை நிறுத்திச் செல்கிறார்கள். அங்கு மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதால் சாலை மிகவும் குறுகலாகியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைப் போக்குவரத்துக் காவல்துறை சரி செய்யுமா?
கே. ஸ்ரீதர், பிராட்வே.