மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்குத் தினமும் சென்று வருவோர் பல ஆயிரம் பேர். அதிகப் பேருந்துக் கட்டணத்தால் ரயில் பயணத்தைத்தான் இப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர். இதனால் காலையிலும் மாலையிலும் அதிகக் கூட்டம் இருக்கும்.
மீஞ்சூர் ரயில் நிலைய நடைமேடையில் விளக்குகள் எரியாதது, ரயில்வே காவலர்கள் இல்லாததால் திருடர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. ரயில்வே துறை அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.