ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

சுனாமி சுவடுகள் ! கவிஞர் இரா .இரவி !

Updated On :6 ஆகஸ்ட் 2025, 5:46 pm IST

அம்மா இருக்க  குழந்தை இறந்தது 
குழந்தை இருக்க  அம்மா இறந்தது !

குழந்தைகளை ஆதரவற்றோர் ஆக்கியது 
பெற்றோர்களை குழந்தையற்றோர் ஆக்கியது !

கொடுமைகள் சொல்லில் அடங்காது 
கொன்று மகிழ்ந்தது கொடிய சுனாமி !

எதிர்பாராத நேரத்தில் இடியாய் வந்தது 
எல்லோரையும் புரட்டிப் போட்டு விட்டது !

கடல்அலை ராட்சத பேரலையாய் வந்தது 
கண்டபடி வீசி அடித்துக் கொன்று மகிழ்ந்தது !

தூங்கியவர்களை நிமிடத்தில் பிணமாக்கியது 
தூரமாக நின்றவர்களை விரட்டிப் பிடித்தது !

இறுதிச்சடங்கிற்கு  சடலம் இல்லாமல் செய்தது 
இறந்தவர் பிழைத்தவர் தெரியாமல் போனது !

ஆடிய மனிதர்களின் ஆட்டம் நிறுத்தியது 
ஆட்டம்  இயற்கையிடம் செல்லாது அறிவித்தது  !

பலரது வீடுகள் இல்லாமல்  போனது
பலரது உடைமைகள் கடலுக்குள் போனது !

இன்று நினைத்தாலும் அச்சம் பிறக்கும்
என்று நினைத்தாலும் அச்சம் பிறக்கும் !   

இயற்கையின்  சீற்றம் எப்படி  உணர்த்தியது 
இயற்கையே பெரிது என்பதைக் காட்டியது !

சுனாமி சுவடுகள் பலரின் வாழ்வில் 
சோகம் தந்து வடுக்களாய் நிலைத்தது !

பஞ்ச பூதங்களை சிதைப்பதை நிறுத்து 
பஞ்சத்தில் ஆழ்த்திடுவோம் என உணர்த்தியது !   

இனி ஒரு சுனாமி வந்தால் இருக்காது உலகம் 
இனியாவது இயற்கை நேசிப்பை வழக்கமாக்குவோம் !

மனிதர்கள் மீது மட்டுமல்ல இயற்கையின் 
மீதும் அன்பு செலுத்தி வாழ்ந்திடுவோம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.