தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

வழி தவறிய பயணங்கள்:  கவிஞர் இரா .இரவி !

Updated On :14 நவம்பர் 2016, 4:58 pm IST

இளைய தலைமுறையில் பலரின் பயணங்கள் 
இன்று ஆனது வழி தவறிய பயணங்கள் !

கற்கும் வயதில் மது குடிக்கும் கொடுமை 
கேடு தரும் மதுவை விரும்பி நாடும் அவலம் !

குடி குடியைக் கெடுக்கும் என்பதை படித்துவிட்டு 
குடிக்கும் படித்தவர்கள் திருந்துவது என்றோ ?

என்றைக்காவது என்று தொடங்கிய பழக்கம் 
என்றும் வேண்டும் என்றான இழிநிலை !

நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம் 
நாளும் மது அருந்துவதில் தொடங்குகின்றது !

அடி தடி சண்டை வந்து கடைசியில் 
அன்பு முறிந்து நண்பன் பகைவனாகின்றான் !

காவல் நிலையம் வரையில் வழக்குகள் சென்று 
காப்பாற்றப்   பெற்றோர் வரும் நிலை வருகின்றது !

சனி ஞாயிறு மட்டும் என்று என்கின்றனர் 
சதா குடி என்று மாறி விடுகின்றனர் !

உலக அளவில் இளைஞர்கள் அதிகம் 
உள்ள நாட்டிற்கு  குடியால் கேடு வந்தது !

மது குடிக்கும் காட்சிகள் இல்லாத 
திரைப்படங்களே இல்லை என்றானது !

மது மறந்த  இளைஞனுக்கும் இந்த 
மட்டமான காட்சிகள் நினைவூட்டுகின்றன !

குடி விற்பனை இலக்கு ஏன் எட்டவில்லை என்று 
கேட்டதற்கு கடைக்காரர் சொன்னாராம் !

பொறியியல் கல்லூரி விடுப்பில் உள்ளது 
திறந்ததும்  எட்டி விடுவேன் என்றாராம் !

மாணவரே இளையோரே  சாதிக்க பிறந்தவர்கள் 
மதுவிற்கு அடிமையாகி வாழ்வை இழக்கலாமா ?

உடலுக்கும் உயிர்க்கும் கேடு தரும் மது வேண்டாம் 
உனது எதிர்காலம் சிதைக்கும் மது வேண்டாம் !

உங்களுடைய இலக்கை அடைய வேண்டுமானால் 
உங்களின் பயணப்பாதை சரியாக இருக்க வேண்டும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.