மனம் எனும்  மாயப்பேய்:  கவிஞர் இரா .இரவி

மனம் ஒரு குரங்கு என்பது  முற்றிலும் உண்மை 
மனத்தைக் கட்டுப்படுத்துவது மனிதனின் கடமை !

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்பதால் 
குரங்கின் குணம் கொஞ்சம் இருப்பது உண்டு !

விலங்கு குணம் மனிதனுக்கு வரும் அதனை 
விவேகமாகச் சிந்தித்து அகற்றிட வேண்டும் !

மனம் இரண்டு வகை உண்டு உணர்ந்திடுக 
மனதில் தேவதை உண்டு சாத்தானும்  உண்டு !

தேவதை நல்லது மட்டுமே சொல்லும் 
தவறாது கேட்டு நடந்தால் வாழ்க்கை சிறக்கும் !

சாத்தானின் கெட்டதுக்குச்  செவி சாயத்தால்
சீரழிவிற்கு உடன் வழி  வகுக்கும் !

அடுத்தவரின் உயர்வினைக்   கண்டு 
அந்த தேவதை மனம் மகிழ்ந்து வாழ்த்தும் !

சாத்தானோ பொறாமைத் தீ வளர்க்கும் 
செவி சாய்க்காமல் இருப்பது நலம் !

எண்ணம் போல வாழ்க்கை என்பது 
என்றும் முற்றிலும் உண்மை !

நல்லது எண்ணிட நல்லது நடக்கும் 
அல்லது எண்ணிட அல்லது நடக்கும் !

உதவி செய்யும் உள்ளம் இருந்தால் 
உயர்வு வாழ்க்கையில் தானாக அமையும் !

தனக்காக தன்னல வாழ்வு விடுத்து 
தன்னை நம்பியவர்களுக்காக வாழ்வது சிறப்பு !

என்ன நினைத்தாய் என்று கேட்டால் உடன் 
இன்னது நினைத்தேன் எனச் சொல்லும் !

நினைவு நல்லது எப்போதும் வேண்டும் 
நினைவு செயல் சொல் நல்லது வேண்டும் !

மனதாலும் மற்றவருக்கு தீங்கு நினைக்காது 
மனத்தைச்  செம்மையாக வைத்திருக்க வேண்டும் !

கெட்ட எண்ணங்களை உடன் நீக்கிட வேண்டும் 
நல்ல எண்ணங்களை மட்டுமே வைத்திடல் வேண்டும் !

தான் என்ற அகந்தை ஒருவருக்கு வந்துவிட்டால் 
தள்ளிவிடும் படு பாதாளத்தில் கவனம் வேண்டும் !

மனசாட்சிக்குப் பயந்து வாழ்வதே சிறப்பு 
மனம் ஒரு கோயில் மதித்து வாழ வேண்டும் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com