75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

மல்லுக்கட்டும்  ஜல்லிக்கட்டு ! கவிஞர் இரா .இரவி 

Published On :6 ஆகஸ்ட் 2025, 5:46 pm IST
ஏறுதழுவுதல் என்பது தமிழர்களிடையே 
இன்றல்ல என்றும் நடைமுறையில் உள்ளது !
எதற்காக  தடை   செய்கிறார்கள் என்று 
எண்ணிப் பார்த்தால் விளங்கியது சதி !
உலகமயம் என்ற அரக்கனின்  வேலை   
உள்ளூர் நாட்டு மாடுகள் அழிப்பு வேலை !
மேலோட்டமாகப் பார்த்தால் இத்தடை 
மாடுகள் காப்புப் போலத்தான் தெரியும்  !
உள்குத்து வேலை ஆராய்ந்தால் புரியும் 
ஒருவழியாக காளை இனத்தை அழித்தல் ! 
காட்டு விலங்கு அல்ல காளை 
வீட்டு உறுப்பினர் எங்கள் காளை !

தமிழனின் தன்னிகரில்லா வீரத்தை  வியந்து 
தரணி பாராட்டுவது பொறுக்கவில்லை !
கொட்டக்  கொட்டக் குனிபவன் அல்ல 
கொட்டம் அடக்கப் புறப்பட்டு விட்டோம் !
எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான் என்று 
எங்கள் மீது தப்புக்கணக்கு வேண்டாம் !
பொறுமைக்கும் ஒரு எல்லை  உண்டு 
பொங்கி எழுந்தால் தாங்க  மாட்டீர்கள் !
தமிழன் என்றால் இளித்தவாயன் என்று 
தவறாக என்ன வேண்டாம் விழித்து விட்டோம் !
தடையை நீக்குவதைத் தவிர வழியில்லை 
தடையை நீக்கினால் மதிப்புறும் நீதிமன்றம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.