/
ஏறுதழுவுதல் என்பது தமிழர்களிடையே
இன்றல்ல என்றும் நடைமுறையில் உள்ளது !
எதற்காக தடை செய்கிறார்கள் என்று
எண்ணிப் பார்த்தால் விளங்கியது சதி !
உலகமயம் என்ற அரக்கனின் வேலை
உள்ளூர் நாட்டு மாடுகள் அழிப்பு வேலை !
மேலோட்டமாகப் பார்த்தால் இத்தடை
மாடுகள் காப்புப் போலத்தான் தெரியும் !
உள்குத்து வேலை ஆராய்ந்தால் புரியும்
ஒருவழியாக காளை இனத்தை அழித்தல் !
காட்டு விலங்கு அல்ல காளை
வீட்டு உறுப்பினர் எங்கள் காளை !
தமிழனின் தன்னிகரில்லா வீரத்தை வியந்து
தரணி பாராட்டுவது பொறுக்கவில்லை !
கொட்டக் கொட்டக் குனிபவன் அல்ல
கொட்டம் அடக்கப் புறப்பட்டு விட்டோம் !
எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான் என்று
எங்கள் மீது தப்புக்கணக்கு வேண்டாம் !
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
பொங்கி எழுந்தால் தாங்க மாட்டீர்கள் !
தமிழன் என்றால் இளித்தவாயன் என்று
தவறாக என்ன வேண்டாம் விழித்து விட்டோம் !
தடையை நீக்குவதைத் தவிர வழியில்லை
தடையை நீக்கினால் மதிப்புறும் நீதிமன்றம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









