சட்டம் : கவிஞர் இரா .இரவி 

மக்களுக்காக இயற்றப்படுவதே சட்டம்   
மனதில் கொள்ள வேண்டும் எல்லோரும் !

சட்டம் என்று சொல்லி பயமுறுத்தாதீர் 
சட்டம் மக்கள் நலன் காக்க வேண்டும் !

வெள்ளையனிடம் இருந்து விடுதலை எதற்கு ?
விரும்பியபடி ஏழைகள் மகிழ்வாக வாழ்வதற்கு !   

திடீரென சில சட்டங்கள் வருகின்றன 
தினமும் மக்களை வேதனையில் வீழ்த்துகின்றன !

அடக்குமுறைக்குப் பெயர்தான் சட்டமோ ?
அன்பாக உரைப்பதே உன்னதச் சட்டம் !

மக்களுக்கு நன்மை செய்வதே சட்டம்
மக்களை வதைப்பது சட்டம்அன்று !

பட்டுக்கோட்டையில் பாடல் வரிகள் 
பாவலன் என் நினைவிற்கு வந்தன !

சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்  தடுக்குது 
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடுது !

திருடனாய்ப் பார்த்து திருந்த வேண்டுமென்றார் 
திருடன்கள் திருந்துவதாகத் தெரியவில்லை !

சட்டம் என்பது நல்லாருக்கு ஆதரவாகவும் 
தீயோருக்கு எதிராகவும் இருக்க வேண்டும் !

நாட்டு நடப்போ எதிர்மாறாக உள்ளன 
நடக்கும் இக்கொடுமைகளை மாறிட வேண்டும் !

சட்டத்தின் ஓட்டையில் வெளியே வருகின்றனர் 
சட்டத்தை மீறுகிறான் தண்டிக்க முடியவில்லை !

அப்பாவி மக்களிடம் மட்டும்  நம்நாட்டு சட்டம் 
அவரமாகப் பாய்ந்து தண்டனை கொடுத்து மகிழும் !

இந்நிலை மாற வேண்டும் சட்டம் என்பது 
ஏழை மக்களை காக்க வேண்டும் அதுவே சிறப்பு !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com