இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

நிழலாடும் நினைவு: கவிஞர் இரா .இரவி

Updated On :10 ஜூலை 2017, 6:21 pm IST

காதல் தோல்வியில் முடிந்து விட்டாலும்
காதல் நினைவுகள் மூளையில் நிழலாடும்!

மறந்து விடு என்று உதடுகள் உரைத்தாலும்
மறக்க முடியாமல் உள்ளங்கள் தடுமாறும் !

பசுமரத்து ஆணி போல பதிந்திட்ட நினைவுகள்
பழையது என்ற போதும் பசுமை நினைவுகள் !

கடவுள் உண்டா? இல்லையா? தர்க்கத்தில்
காதல் முதல்படி  எடுத்து வைத்தோம் !

இளையராசாவை இருவருக்கும் இனிதே பிடித்தது
இசையால் இருவரும் கருத்து ஒருமித்தோம் !

நடிகர் கார்த்திக் பிடிக்கும் என்றாள் அவள்
நடிகர் கார்த்திக் பிடிக்காமல் ஆனது எனக்கு !

கவிதை எழுதிடக் காரணமாக இருந்தவள்
கவிதையை ரசித்து ஊக்கப்படுத்தி மகிழ்வித்தாள் !

கருப்புத் தான் என்ற போதும் அழகாக இருந்தாள்
கார்மேகக் கூந்தலோ இடைக்குக் கீழ் இருக்கும் !

பொது அறிவில் போதுமான நுட்பம் உண்டு
பொதுவாக நல்ல குணம் தான் அவளுக்கு !

சொல்வதை அப்படியே ஏற்பதில்லை அவள்
சொல்லியதில் மறுப்பு இருந்தால் தெரிவிப்பாள் !

நல்லதைப் பாராட்டிட தயங்கியது இல்லை
அல்லதை நீக்கிட அறிவுறுத்தியது உண்டு !

அவள் அருகே இருந்தால் நேரம் போதாது
அவள் பிரிந்து இருந்தால் நேரம் போகாது !

அதிகம் பேசாமல் அளந்தே பேசுவாள்
அறிவார்ந்த பேச்சாக அவை இருக்கும் !

மனித நேயம் காட்டுவதில் மகத்தானவள் அவள்
மனிதர்களை மதிக்க வேண்டுமென வலியுறுத்தியவள் !

வருடக் கணக்கில் காலங்கள் கழிந்தாலும்
வஞ்சியின் நினைவு எஞ்சியுள்ளது இன்னும் !

நிழல் என்பது பிரியாது உடன் வரும்
நினைவு என்பது மறக்காது உள் இருக்கும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.