இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

இன்றைய தாலாட்டு: கவிஞர் இரா. இரவி

Updated On :17 ஜூலை 2017, 5:07 pm IST

பாட்டுப் பாடி தூங்க வைத்த காலம் போச்சு
பாட்டுப் பாடத்தெரியாத அம்மாக்கள் காலம் இது !

அன்று தாலாட்டில் வீரம் கற்பித்தார்கள்
அன்று தாலாட்டில் தாய்மாமன் பற்றிப் பாடினார்கள்!

மன்னர்களின் வீர வரலாற்றைப் பாடினார்கள்!
மண்ணின் எடுத்து இயம்பினார்கள்!

மலர்களின் வகைகளை பாட்டில் சொன்னார்கள்
மனங்களின் நிலைகளை தாலாட்டில் பாடினார்கள் !

நல்ல குணம் தான் பாட்டால் உணர்த்தினார்கள்
நல்ல மனிதர்களை அறிமுகம் செய்தார்கள் !

முதல் வகுப்பறையாக தொட்டில் இருந்தது
முதல் பாடமாக தாலாட்டும் இருந்தது !

நீதி போதனைகள் பாட்டால் நடந்தது
நீதி நேர்மையின் நன்மை விளக்கியது !

காந்தியடிகள் பெருமையும் பாட்டில் வந்தது
காமராசர் அருமையும் பாட்டில் வந்தது !

அறிவார்ந்த கருத்துக்கள் பாட்டில் இருந்தது
அறிவாளிகளாக குழந்தைகள் நாட்டில் வளர்ந்தன!

தாலாட்டைக் கேட்டு குழந்தைகள் தூங்கின
தாலாட்டுப் பாட்டுக்கு குழந்தைகள் ஏங்கின !

தாலாட்டு ஒப்பாரியில் முடிந்தது வாழ்க்கை
தாலாட்டு ஒப்பாரி இரண்டும் வழக்கொழிந்தது !

அன்றைய தாலாட்டு அற்புதமாக இருந்தது
இன்றைய தாலாட்டு இல்லாமல் போனது !

தாய்மார்கள் தாலாட்டைப் பழகுங்கள் இன்று
தாயின் கடமை ! தாலாட்டுப் பழகுதல் நன்று !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.