மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

இன்றைய தாலாட்டு: கவிஞர் இரா. இரவி

Published On :

பாட்டுப் பாடி தூங்க வைத்த காலம் போச்சு
பாட்டுப் பாடத்தெரியாத அம்மாக்கள் காலம் இது !

அன்று தாலாட்டில் வீரம் கற்பித்தார்கள்
அன்று தாலாட்டில் தாய்மாமன் பற்றிப் பாடினார்கள்!

மன்னர்களின் வீர வரலாற்றைப் பாடினார்கள்!
மண்ணின் எடுத்து இயம்பினார்கள்!

மலர்களின் வகைகளை பாட்டில் சொன்னார்கள்
மனங்களின் நிலைகளை தாலாட்டில் பாடினார்கள் !

நல்ல குணம் தான் பாட்டால் உணர்த்தினார்கள்
நல்ல மனிதர்களை அறிமுகம் செய்தார்கள் !

முதல் வகுப்பறையாக தொட்டில் இருந்தது
முதல் பாடமாக தாலாட்டும் இருந்தது !

நீதி போதனைகள் பாட்டால் நடந்தது
நீதி நேர்மையின் நன்மை விளக்கியது !

காந்தியடிகள் பெருமையும் பாட்டில் வந்தது
காமராசர் அருமையும் பாட்டில் வந்தது !

அறிவார்ந்த கருத்துக்கள் பாட்டில் இருந்தது
அறிவாளிகளாக குழந்தைகள் நாட்டில் வளர்ந்தன!

தாலாட்டைக் கேட்டு குழந்தைகள் தூங்கின
தாலாட்டுப் பாட்டுக்கு குழந்தைகள் ஏங்கின !

தாலாட்டு ஒப்பாரியில் முடிந்தது வாழ்க்கை
தாலாட்டு ஒப்பாரி இரண்டும் வழக்கொழிந்தது !

அன்றைய தாலாட்டு அற்புதமாக இருந்தது
இன்றைய தாலாட்டு இல்லாமல் போனது !

தாய்மார்கள் தாலாட்டைப் பழகுங்கள் இன்று
தாயின் கடமை ! தாலாட்டுப் பழகுதல் நன்று !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.