நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இன்றைய தாலாட்டு: கவிஞர் இரா. இரவி

Updated On :17 ஜூலை 2017, 11:37 am

பாட்டுப் பாடி தூங்க வைத்த காலம் போச்சு
பாட்டுப் பாடத்தெரியாத அம்மாக்கள் காலம் இது !

அன்று தாலாட்டில் வீரம் கற்பித்தார்கள்
அன்று தாலாட்டில் தாய்மாமன் பற்றிப் பாடினார்கள்!

மன்னர்களின் வீர வரலாற்றைப் பாடினார்கள்!
மண்ணின் எடுத்து இயம்பினார்கள்!

மலர்களின் வகைகளை பாட்டில் சொன்னார்கள்
மனங்களின் நிலைகளை தாலாட்டில் பாடினார்கள் !

நல்ல குணம் தான் பாட்டால் உணர்த்தினார்கள்
நல்ல மனிதர்களை அறிமுகம் செய்தார்கள் !

முதல் வகுப்பறையாக தொட்டில் இருந்தது
முதல் பாடமாக தாலாட்டும் இருந்தது !

நீதி போதனைகள் பாட்டால் நடந்தது
நீதி நேர்மையின் நன்மை விளக்கியது !

காந்தியடிகள் பெருமையும் பாட்டில் வந்தது
காமராசர் அருமையும் பாட்டில் வந்தது !

அறிவார்ந்த கருத்துக்கள் பாட்டில் இருந்தது
அறிவாளிகளாக குழந்தைகள் நாட்டில் வளர்ந்தன!

தாலாட்டைக் கேட்டு குழந்தைகள் தூங்கின
தாலாட்டுப் பாட்டுக்கு குழந்தைகள் ஏங்கின !

தாலாட்டு ஒப்பாரியில் முடிந்தது வாழ்க்கை
தாலாட்டு ஒப்பாரி இரண்டும் வழக்கொழிந்தது !

அன்றைய தாலாட்டு அற்புதமாக இருந்தது
இன்றைய தாலாட்டு இல்லாமல் போனது !

தாய்மார்கள் தாலாட்டைப் பழகுங்கள் இன்று
தாயின் கடமை ! தாலாட்டுப் பழகுதல் நன்று !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.