என்  முதல் கனவு ! கவிஞர் இரா .இரவி !

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் 
இனிய சமதரும சமுதாயம் என்  முதல் கனவு !

இருப்பவன் இல்லாதவன் என்ற நிலையின்றி 
ஏற்றத் தாழ்வுகள் இன்றி சமநிலை !

அடிப்படைத் தேவைகள் என்பதை 
அரசே  வழங்கி விடும் மக்களுக்கு !

தனியார் உடைமை எதுவுமின்றி 
தரணியில் பொதுவுடைமை வேண்டும் !

கோடிகளைப்  பதுக்குவோர் இல்லை 
கொடிகளுக்கு வேலை இல்லை !

செல்வக் கொழிப்பும் இல்லை 
செல்வாக்குகளும் இல்லை !

ஏழை பணக்காரன் இல்லை 
எல்லோருக்கும் சமநிலை !

மாட மாளிகையும் இல்லை 
ஓலைக் குடிசையும் இல்லை !

பசியும் பட்டினியும் இல்லை 
பணக்கார ஆணவம் இல்லை !

கந்து வட்டி இல்லவே இல்லை 
கொலை தற்கொலையும் இல்லை !

கல்வியிலும் ஏற்றத் தாழ்வு இல்லை 
கல்வி அனைவருக்கும் சமமாக !

சாதி மதம் இல்லவே இல்லை 
சாதி மத சண்டையும் இல்லை !

அனைவருக்கும் சம வாழ்வு 
அன்பு இருக்கும்  நிறைவாழ்வு  !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com