பறவையின் மனசு: கவிஞர் இரா. இரவி.

சிறகுகளை விரித்து வானம் பறக்கும்சிட்டுக்குருவி தொடங்கி கழுகுகளும் பறக்கும் !பறவைகளை அஃறிணை என்கிறோம் நாம்பறக்க முடியுமா? மனிதனால் ஒரு நிமிடம்!மனிதனுக்கு பறக்கும் ஆற்றல் இல்லைமாண்புமிக்க பறவைகளுக்கு பறக்க முடியும் !மனிதனை விட உயர்திணை தான் பறவைமனிதன் மட்டம் தாம் பறவைக்கு முன்னே!பறவை கூடு கட்டி குதூகலமாக வாழும்பாரம் மனபாரம் பறவைகளுக்கு இல்லை!பறவைகள் பழங்கள் உண்டு பின் துப்பிய விதைகளேபாரினில் காடுகள் வளர காரணமானது!பறவைகள் மட்டும் இல்லை என்றால்பரந்து விரிந்த காடுகளுக்குச் சாத்தியமில்லை !புழு பூச்சிகளை உண்டு சுத்தம் செய்வதும் பறவைகளேபூமிக்கு அழகு சேர்ப்பதும் அற்புதப் பறவைகளே!மனிதனைப் போல பதுக்குவது இல்லை பறவைகள்மனசு நல்ல மனசு உழைத்து உண்ணும் பறவைகள் !விமானம் கண்டுபிடிக்க காரணம் பறவைகள்விமானத்தையும் விஞ்சிப் பறக்கும் பறவைகள் !குழந்தைகள் பார்த்தால் குதூகலம் கொள்வார்கள்கொள்ளையடிக்கும் உள்ளங்களை பறக்கும் பறவைகள் !அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்றுஆசைப்பட்டார் அந்தக் கால கவிஞர்!பாலில் உள்ள தண்ணீரை நீக்கி விட்டுபாலை மட்டும் அருந்துமாலம் அக்காலத்து அன்னப்பறவை !மனிதர்களும் அல்லவை நீக்கி நல்லவை ஏற்றுமண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டும் !தேசப்பிதா அடுத்த பிறவி என்று இருந்தால்தமிழனாகப் பிறக்க விரும்பினர் திருக்குறள் படிக்க !முதுமுனைவர் இறையன்பு அடுத்த பிறவி இருந்தால்மண்ணில் பறவையாகப் பிறக்க விரும்பி உள்ளார் !பறவையின் மனசு பண்பட்ட மனசுபாரினில் பறவை மனசை மனிதர்களும் பெறுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com